×

நாள்தோறும் ஒரு கடன் தள்ளுபடி அறிவிக்கும் பழனிசாமி : ஆனா பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை: ப. சிதம்பரம்!!

சென்னை :  இலவசங்கள் மற்றும் சலுகை திட்டங்களால் தமிழகத்தில் கடன் சுமை அதிகரிக்கும்: என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இடைக்கால பட்ஜெட் படி தமிழக அரசின் கடன் சுமை தற்போது, 4 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது, 5 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக வரும் ஆண்டில் கூடும் என கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி! 2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ 65,994 கோடி பற்றாக்குறை!இந்தப் பற்றாக்குறையை நிரப்பவதற்கு தமிழ்நாடு அரசு மேலும் கடன் வாங்கப் போகிறது

இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று திரு எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார். இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!  “எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisami ,Ana ,p. Scatter , ப. சிதம்பரம்
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...